ஜெ.அன்பழகனை சந்திக்க மருத்துவமனை விரைந்த ஸ்டாலின், உதயநிதி!

 

ஜெ.அன்பழகனை சந்திக்க மருத்துவமனை விரைந்த ஸ்டாலின், உதயநிதி!

கொரோனா தொற்று காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
தி.மு.க எம்.எல்.ஏ-வும் மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்தவர் என்பதால் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது. செயற்கை சுவாசம் அளித்து உயிரைக் காக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

ஜெ.அன்பழகனை சந்திக்க மருத்துவமனை விரைந்த ஸ்டாலின், உதயநிதி!
அவர் உடல் நலம் குறித்து தி.மு.க-வினரை விட அ.தி.மு.க தலைவர்கள் அதிகம் கவலைப்பட்டனர். ட்வீட் பதிவு வெளியிட்டதோடு நில்லாமல் நேரிலும் சென்று அவரது உடல் நலம் குறித்து ஆலோசனை நடத்தினர். தி.மு.க-வினர் கூட செல்லத் தயங்கும் நிலையில் அ.தி.மு.க அமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்தார் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
இதைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் ஜெ.அன்பழகன் உடல் நலம் குறித்து விசாரித்தார். அவருடன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் சென்றனர்