‘சைபர் கிரைம் போலீசாரிடம்’ திமுக ஜெகத்ரட்சகன் பரபரப்பு புகார்!

 

‘சைபர் கிரைம் போலீசாரிடம்’ திமுக ஜெகத்ரட்சகன் பரபரப்பு புகார்!

புதுச்சேரி திமுக பொறுப்பாளரும் எம்பியுமான ஜெகத்ரட்சகன், பாஜகவில் இணைய உள்ளதாக அண்மையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. புதுச்சேரியின் 30 இடங்களிலும் திமுக ஜெயிக்கவில்லை என்றால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறிய ஜெகத்ரட்சகனே பாஜகவுக்கு சொல்கிறாரா? என அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்பின.

‘சைபர் கிரைம் போலீசாரிடம்’ திமுக ஜெகத்ரட்சகன் பரபரப்பு புகார்!

இதற்கு விளக்கம் அளித்த ஜெகத்ரட்சகன், நான் என்றைக்குமே கோபாலபுரத்து காவல்காரன் தான். பாஜகவில் நான் இணைய உள்ளதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி. மு.க ஸ்டாலின் ஜெயிக்க வேண்டுமென நான் போராடிக் கொண்டிருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களை நம்ப வேண்டாம். எனது நற்பெயரை கெடுக்கும் வகையில் சிலர் அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனக்கு எதிராக அவதூறு பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெகத்ரட்சகன் சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. சமூக வலைதளங்களில் இருக்கும் அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார். ஜெகத்ரட்சகன் அளித்த புகாரின் பேரில், அவதூறு பரப்பிய நபர்களுக்கு சைபர் கிரைம் போலீஸ் வலைவிரித்துள்ளதாம்.