“நல்லவர்களை கெட்டவர்களாக காட்டுவதில் கை தேர்ந்த திமுக” – அமைச்சர் பென்ஜமின்
திருவள்ளூர்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறை இன்று நடைபெற்றது. திருவள்ளூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிமுக மீதும், முதல்வர் மீது அவதூறான தகவல்களை பரப்பி வருவதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக தொழில்நுட்ப பிரிவினர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போது சமூக வலைதளங்களில் நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் மாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர் தான் என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் எதிராக திமுக வெளிப்படுத்தும் தகவல்களை பொய்யானது என பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார்.