நீண்ட இழுபறிக்கு பின் இந்த 6 தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிய திமுக

 

நீண்ட இழுபறிக்கு பின் இந்த 6 தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிய திமுக

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக, தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. கடந்த முறை தேர்தல்களிலெல்லாம் கூட்டணி கட்சிகள் கேட்ட தொகுதிகளை வழங்கியது. ஆனால், இந்த முறை தேர்தலில் வெற்றி வாகையை சூட திட்டமிட்டிருக்கும் திமுக தொகுதி பங்கீட்டில் கறார் காட்டியது. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்ட விசிக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் 6 தொகுதிகள் தான் வழங்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கும் திமுக 6 தொகுதி தான் கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இழுபறிக்கு பின் இந்த 6 தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிய திமுக

அதன்படி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி நீடித்துவந்தது. மதுரவாயல், கோவில்பட்டி, கோவை வடக்கு, திண்டுக்கல், திருப்பூர் தெற்கு, பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விருப்ப தொகுதிகளாக பட்டியலிட்டது. மதுரவாயிலை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதால் மார்க்சிஸ்டு கட்சிக்கு கேட்ட இடத்தை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
3 நாட்களாக நடந்த பேச்சுவார்த்தை ஒருவழியாக நிறைவடைந்த நிலையில் திருப்பரங்குன்றம், அரூர், கந்தவர்வகோட்டை, திண்டுக்கல், கோவில்பட்டி, கீழ்வேளூர் ஆகிய 6 தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.