வேளாங்கண்ணி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆட்டைய போட்ட திமுக நிர்வாகி! தலைமறைவாக இருந்தவர் சென்னையில் கைது!

 

வேளாங்கண்ணி கோவிலுக்கு சொந்தமான   நிலத்தை ஆட்டைய போட்ட திமுக நிர்வாகி! தலைமறைவாக இருந்தவர் சென்னையில் கைது!

புனித வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் அரசு நிலங்களை ஆட்டைய போட்டுவிட்டு சென்னையில் தலைமறைவாக இருந்த திமுக நிர்வாகி போலீசில் சிக்கியிருக்கிறார்.

வேளாங்கண்ணி கோவிலுக்கு சொந்தமான   நிலத்தை ஆட்டைய போட்ட திமுக நிர்வாகி! தலைமறைவாக இருந்தவர் சென்னையில் கைது!

நாகை மாவட்டம் கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன். இவர், போலி ஆவணங்கள் தயாரித்து அரசு புறம்போக்கு நிலங்கள், சுனாமி குடியிருப்புகளுக்கு சொந்தமான இடங்கள், வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் கோவில் மற்றும் புனித வேளாங்கண்ணி திருத்தல் பேராலயத்திற்கு சொந்தமான இடங்களையும் அபகரித்துவிட்டார் என்று அதிமுக நகர செயலாளர் தங்க., கதிரவன் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் 8 பிரிவுகளின் கீழ் தாமஸ் ஆல்வா எடிசன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர். ஆனால், அவர் போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார்.

வேளாங்கண்ணி கோவிலுக்கு சொந்தமான   நிலத்தை ஆட்டைய போட்ட திமுக நிர்வாகி! தலைமறைவாக இருந்தவர் சென்னையில் கைது!

தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். சென்னையில் கைது செய்யப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசனை விசாரணைக்காக நாகப்பட்டினம் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.