குமாரபாளையத்தில் முன்விரோதம் காரணமாக திமுக நிர்வாகி படுகொலை

 

குமாரபாளையத்தில் முன்விரோதம் காரணமாக திமுக நிர்வாகி படுகொலை

நாமக்கல்

குமாரபாளையத்தில் முன்விரோதம் திமுக நிர்வாகி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகரை சேர்ந்தவர் சரவணன். இவர் குமாரபாளையம் நகராட்சி ஒன்றாவது வார்டு திமுக செயலாளராக உள்ளார். இவர் நேற்று இரவு காவேரிநகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

குமாரபாளையத்தில் முன்விரோதம் காரணமாக திமுக நிர்வாகி படுகொலை

அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர், சரவணனை கீழே தள்ளி கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். மேலும், அவரை தடுக்க முயற்சித்த சரவணனுடைய நண்பர்கள் பிரபாகரன், முரளிதரன் ஆகியோரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சரவணன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த முரளிதரன், பிரபாகரன் ஆகியோரை அந்தபகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

குமாரபாளையத்தில் முன்விரோதம் காரணமாக திமுக நிர்வாகி படுகொலை

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சரவணனுக்கும் கொலையாளி பிரகாஷுக்கும் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடைபெற்றது தெரியவந்தது. இதனை அடுத்து, தலைமறைவாக உள்ள கொலையாளி பிரகாஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்