சென்னையில் திமுக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு !

 

சென்னையில் திமுக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு !

சென்னையில் நாளை திமுக மற்றும் தோழமை கட்சிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

சென்னையில் திமுக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு !

மத்திய 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 22 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர் .

சென்னையில் திமுக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு !

இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக அறிக்கை ஒன்று வெளியிட்ட திமுக, தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் போராடி வரும் விவசாயிகளுக்காக, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்து – 18.12.2020 (நாளை) சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 வரை அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்” நடைபெறும் என்று அறிவித்தது.

சென்னையில் திமுக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு !

இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.ஆனால் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை திட்டமிட்டபடி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் நடக்கும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.