“நிர்வாகிகள் பெயர் கூட தெரியாது” உண்மையை ஒப்புக்கொண்ட திமுக வேட்பாளர்!!

 

“நிர்வாகிகள் பெயர் கூட தெரியாது” உண்மையை ஒப்புக்கொண்ட திமுக வேட்பாளர்!!

திமுக திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தனக்கு நிர்வாகிகள் பெயர் கூட தெரியாது என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

“நிர்வாகிகள் பெயர் கூட தெரியாது” உண்மையை ஒப்புக்கொண்ட திமுக வேட்பாளர்!!

திருச்சி கிழக்கு தொகுதியின் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளவர் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் நிறுவனர் தலைவர் இனிகோ இருதயராஜ் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரான இனிகோ இருதயராஜ் இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரை கிறிஸ்துமஸ் விழாவிற்கு அழைத்து கேக் வெட்டி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருப்பவர். இவரை பற்றி ஒருமுறை தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவில் வாசலில் பெரியார் சிலையை வைத்து இந்துக்களையும் இந்து கடவுளையும் அவமதித்த கும்பல், மதச்சார்பின்மை என்ற போர்வையில் மதமாற்றத்தையே தொழிலாக கொண்ட இனிகோ இருதயராஜை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வைக்க திட்டமிடுகிறது. இனிகோ இருதயராஜ் போன்ற இந்த இந்துவிரோத சக்திகளை தோற்கடித்து இந்துக்களுக்கு எதிராக செயல்படும் இந்த கூட்டத்தை விரட்டியடிப்போம் என்று கூறியிருந்தார்.

“நிர்வாகிகள் பெயர் கூட தெரியாது” உண்மையை ஒப்புக்கொண்ட திமுக வேட்பாளர்!!

இதை தொடர்ந்து திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக இனிகோ இருதயராஜை ஸ்டாலின் போட்டியிட வைக்கிறார். நத்தர்ஷா பள்ளிவாசல்,மன்னார்புரம், இ.பி.ரோடு, ஓம்சக்தி வேல்முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு கேட்ட வந்த அவர், மக்கள் முன் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார். இதை தொடர்ந்து பேச தொடங்கிய அவர், நான் அரசியலுக்கு புதுசுங்க; அதனால் நிர்வாகிகள் பெயரை கூட கேட்டு கேட்டு தான் சொல்லுவேன் என்றார்.