பேச்சுவார்த்தைக்கு வரும்படி கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு

 

பேச்சுவார்த்தைக்கு வரும்படி கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியினை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று ஒரேநாளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

பேச்சுவார்த்தைக்கு வரும்படி கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு

இதனிடையே வேட்பாளர்களை களமிறக்க தயாராக இருக்கும் பிரதான கட்சிகள், அதற்கு முன்னதாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளன. அதன் படி, காங்கிரஸுடன்,திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை உறுதியான நிலையில், தொகுதி பங்கீடு சுமூக நிலையை எட்டவில்லை.

இந்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. நாளை மாலை 5 மணிக்கு கூட்டணி பேச்சவார்த்தைக்கு வருமாறு 2 கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.