கூண்டோடு அதிமுகவில் இணைந்த திமுகவினர்!

 

கூண்டோடு அதிமுகவில் இணைந்த திமுகவினர்!

திமுகவில் இருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர், அதிமுகவில் இணைந்தனர். தேனியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில், அவர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கூண்டோடு அதிமுகவில் இணைந்த திமுகவினர்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட துரைராஜபுரம் காலனியில் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் மாவட்ட கழக செயலாளர் எஸ்பிஎம் சையதுகான் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் டி கே ஜக்கையன் போடி ஒன்றிய செயலாளர் சற்குணம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பிரிதாநடேஷ் மீனாட்சிபுரம் பேரூர் செயலாளர் ராஜலிங்கம், துணைச் செயலாளர் திருப்பதி, துரைராஜபுரம் வார்டு செயலாளர்கள் சேகர், ராமு மற்றும் பலர் உள்ளனர்.