விரைவில் அடுத்த கட்ட பரப்புரை : மு.க ஸ்டாலினின் முக்கிய அறிவிப்பு!

 

விரைவில் அடுத்த கட்ட பரப்புரை : மு.க ஸ்டாலினின் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதை எதிர்நோக்கி தமிழக அரசியல் களமே சூடுபிடித்திருக்கும் சூழலில், தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன. மக்களின் குறைகளை கேட்டறியும் விதமாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின், ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற வாசகத்தை முன்வைத்து எல்லா கிராமங்களிலும் மக்கள் கிராம கிராம சபைக் கூட்டம் நடத்தினார்.

விரைவில் அடுத்த கட்ட பரப்புரை : மு.க ஸ்டாலினின் முக்கிய அறிவிப்பு!

ஒரு சில இடங்களில் ஸ்டாலின் நேரடியாக கூட்டங்களை நடத்திய நிலையில், பல இடங்களில் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் கூட்டங்களை நடத்தினர். அதே போல, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற வாசகத்தை முன்வைத்து உதயநிதி ஸ்டாலினும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

விரைவில் அடுத்த கட்ட பரப்புரை : மு.க ஸ்டாலினின் முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில், விரைவில் அடுத்த கட்ட பரப்புரை குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மக்கள் நம் பக்கமே, நாம் மக்கள் பக்கமே என்பதை கிராம சபைக் கூட்டங்கள் உண்மையாக்கி இருக்கின்றன என்றும் ஜன.23ல் திருத்தணி, மதுரவாயலில் மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் மக்களை சந்திக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 200 தொகுதிகளுக்கும் குறையாத இலையிலா வெற்றியைக் குவித்து கருணாநிதி ஓய்விடத்தில் காணிக்கையாக்குவோம் என்று கூறிய ஸ்டாலின், மக்களுடனான திமுகவின் சந்திப்பும் திமுகவுடனான மக்களின் பேரன்பும் எல்லையின்றி தொடர்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.