கலப்பை, நாற்றுக்கட்டுகளுடன் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

கலப்பை, நாற்றுக்கட்டுகளுடன் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி ஈரோட்டில் திமுக கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கலப்பை, நாற்றுக்கட்டுகளுடன் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தனியார் நிறுவனங்கள் லாபம் அடைவார்கள் என்றும் கூறி இன்று தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது . அதனையடுத்து ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பில் இன்று ஈரோட்டில் 28 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

கலப்பை, நாற்றுக்கட்டுகளுடன் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முன்னதாக ஈரோடு திமுக கட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ் , கணேசமூர்த்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்ட புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வயல்களில் நாற்று நடும் விவசாயிகள் போலவும் , மாடுகள் , கலப்பையும் கையில் வைத்துக்கொண்டும் கலந்து கொண்டனர்.