விழுப்புரம் – கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு வேண்டும்! – தே.மு.தி.க வலியுறுத்தல்

 

விழுப்புரம் – கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு வேண்டும்! – தே.மு.தி.க வலியுறுத்தல்

சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா தீவிரம் குறைந்தது போல் குறைந்து தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை பின்பற்றி மதுரை மாவட்டமும் தேனி மாவட்டமும் ஊரடங்கை அறிவித்துள்ளன. பல மாவட்டங்களில் வணிகர்கள் கடை திறக்கும் நேரத்தைக் குறைத்து வருகின்றனர். சென்னை, மதுரை மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது போன்று முழு ஊரடங்கை கொண்டு வந்து கொரோனாவுக்கு விரைவில் முடிவுகட்ட வேண்டும் என்று மற்ற மாவட்ட மக்களும் கேட்கும் அளவுக்கு கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.

விழுப்புரம் – கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு வேண்டும்! – தே.மு.தி.க வலியுறுத்தல்இந்த நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, போதுமான விழிப்புணர்வு இன்மை காரணமாக முழு ஊரடங்கை கொண்டு வர வேண்டும் என்று தே.மு.தி.க வலியுறுத்தியுள்ளது. இது குறித்து விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வெங்கடேசன் இரண்டு மாவட்ட கலெக்டர்களுக்கும் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “கடைகள் எல்லாம் மாலை 4 மணி வரை தான் திறந்திருக்கும் என்ற வியூகத்தால் கொரோனா தொற்றின் வீரியம் ஒருபோதும் குறையப்போவதில்லை. தொற்று எப்படி வருகிறது என்றே தெரியாத நிலையில் உள்ள நாம் எப்படிக் கட்டுப்படுத்த அல்லது மட்டுப்படுத்த முடியும்?

விழுப்புரம் – கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு வேண்டும்! – தே.மு.தி.க வலியுறுத்தல்அதே போன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உடலின் வெப்பத்தைக் கணக்கிட வெப்பமானி உள்ளதா? அனைத்து கடைகளின் வாயில் பகுதிகளிலும் சுத்தமாக கை கழுவ ‘வாஷ்பேசின்’களும் அதற்கான சோப்புகளும் உள்ளதா? மேற்கண்ட இடங்களில் தனிமனித இடைவெளி சரியாக பின்பற்றப்படுகிறதா? சானிடைசர் வைக்கப்பட்டுள்ளதா?அப்படி சானிடைசர் இருந்தாலும் அது தரமானதா? வைரஸை அழிக்கும் தன்மையுடையதா? கைக்கான கிருமிநாசினியில் விதவிதமான ‘ஃபிளேவர்’ வாசனை வருவது எப்படி? இதை அரசு ஆய்வு செய்ததுண்டா? திடீரென குடிசைத் தொழிலாகிவிட்ட இந்த தயாரிப்புகளின் தரத்தை அறிவது யார், எப்படி? அரசாங்கம் எவ்வளவு கத்தினாலும், கதறினாலும் முகக்கவசம் அணியவே அணியாத கிராமத்து மக்களை முகக்கவசம் அணிய வைப்பது எப்படி? ஒருமுறை போட்டுவிட்டு கழட்டி குப்பைத்தொட்டியில் போட வேண்டிய முகக்கவசத்தை ஒரு மாதம் முழுவதும் போடுகிற மக்களுக்கு இது தவறு என சொல்லப்போவது எப்போது? என ஆயிரமாயிரம் கேள்விகள் இருக்கின்றன.

விழுப்புரம் – கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு வேண்டும்! – தே.மு.தி.க வலியுறுத்தல்சுமார் 40 லட்சத்திற்கும் மேலான மக்கள் உள்ள நம் மாவட்டங்களில் இதை நடைமுறைப்படுத்துவது சிரமம் என்பது எங்களுக்கும் புரிகின்றது. அதனால்தான் முழு ஊரடங்கை விழுப்புரம்-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமல்படுத்தினால் நோய் பரவலைத் தடுக்க முடியும் என மாவட்ட தேமுதிக கோருகிறது” என்று கூறியுள்ளார்.