முதல்வர் வருகைக்கு ஏற்பாடு: கொடிக்கம்பம் நடும்போது உயிரிழந்த தேமுதிக நிர்வாகி!

 

முதல்வர் வருகைக்கு ஏற்பாடு: கொடிக்கம்பம் நடும்போது உயிரிழந்த தேமுதிக நிர்வாகி!

முதலமைச்சர் பழனிசாமி வருகையையொட்டி கொடிக்கம்பம் நடும் போது மின்வயர் பட்டு மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை மற்றும் செம்மஞ்சேரியில் மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு சென்று மழை நீர் தேங்கி இருப்பதையும் முதல்வர் பார்வையிடுகிறார்.

முதல்வர் வருகைக்கு ஏற்பாடு: கொடிக்கம்பம் நடும்போது உயிரிழந்த தேமுதிக நிர்வாகி!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டியில் முதல்வர் வருகையையொட்டி நாவலூரை சேர்ந்த ராஜாமணி என்பவர் மூலம் அதிமுக கொடி கம்பம் அமைப்பதற்காக ஒப்பந்த வேலைக்கு தேமுதிகவை சேர்ந்த தியாகராஜன்(33) என்பவரை நியமித்துள்ளனர். அவர் அதிமுக கொடி கம்பம் நடும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் தியாகராஜன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கானத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.