முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த தேமுதிக நிர்வாகிகள்!

 

முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த தேமுதிக நிர்வாகிகள்!

தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. பல வருடங்களாக ஆட்சிக் கட்டிலில் அமர போராடிக் கொண்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலினை ஒரு வழியாக அமர்த்தியிருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்குப் பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார் ஸ்டாலின். அவருக்கு உலக நாடுகளிலிருந்து உள்ளூர் தலைவர்கள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

Image

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேமுதிக நிர்வாகிகளான சுதீஷ், பார்த்தசாரதி மற்றும் விஜய பிரகாரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு எல்.கே.சுதீஷ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார் என்பது குறிப்பிடதக்கது.