பிரிந்து வாழ்ந்த கணவன் – மனைவி தூக்கிட்டு தற்கொலை!

 

பிரிந்து வாழ்ந்த கணவன் – மனைவி தூக்கிட்டு தற்கொலை!

கிருஷணகிரி

கிருஷ்ணகிரி அருகே பிரிந்து வாழ்ந்த கணவர் தற்கொலை செய்து கொண்டதால் வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூரை சேர்ந்தவர் ஏகநாதன். விவசாயி. இவரது மகள் நிர்மலா. இவருக்கு கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த முனிரத்தினம் என்பவருடன் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், நிர்மலா கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

பிரிந்து வாழ்ந்த கணவன் – மனைவி தூக்கிட்டு தற்கொலை!

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த முனிரெத்தினம், கடந்த 6ஆம் தேதி கோவையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சில நாட்களுக்கு முன்பு நிர்மலாவுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த நிர்மலா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திருமணமாகி சில ஆண்டுகளில் பெண் உயிரிழந்ததால் இதுகுறித்து ஊத்தங்கரை டிஎஸ்பி அலெக்சாண்டர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.