” உடையில்லாத வீடியோவால் கடைக்கு கூட போக முடியலே” – நண்பர்களால் நேர்ந்த கதி

 

” உடையில்லாத வீடியோவால் கடைக்கு கூட போக முடியலே” – நண்பர்களால் நேர்ந்த கதி


ஒரு வாலிபரை நிர்வாண வீடியோ எடுத்து ஊடகத்தில் வெளியிட்டதால் மனமுடைந்த அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்

” உடையில்லாத வீடியோவால் கடைக்கு கூட போக முடியலே” – நண்பர்களால் நேர்ந்த கதி


உத்தரபிரதேசத்தின் அவுரியா மாவட்டத்தில் பேலா பகுதியின் பட்டி கியானி கிராமத்தில் வசிக்கும் பங்கஜ் என்ற வாலிபருக்கு 19 வயது ஆகிறது .அவர் ஒரு நிருவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .இந்நிலையில் கடந்த வாரம் அவரின் நண்பர்கள் அஜய், தினேஷ் மற்றும் சஞ்சய் ஆகிய மூன்று பேர் அந்த பங்கஜின் உடைகளை அகற்றி அவரை நிர்வாணமாக்கிவிட்டனர் ..பிறகு அவரின் நிர்வாண கோலத்தை படமெடுத்தனர் .பிறகு அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டனர் .
அந்த அவரின் நிர்வாண வீடியோ அந்த பகுதி முழுவதும் பரவியது .அதை பார்த்த பலர் அந்த வாலிபர் பங்கஜிடம் இது பற்றி கேட்டு கிண்டல் செய்தனர் .அதனால் பாதிக்கப்பட்ட பங்கஜ் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார் .பிறகு அவரின் தற்கொலை பற்றி போலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்ட்டது .போலீசார் வழக்கு பதிந்து அந்த வாலிபரின் நிர்வாண வீடியோ எடுத்து ,சமூக ஊடகத்தில் வெளியிட்ட அந்த நண்பர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர் .பிறகு பன்கஜின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .