மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் காவலர் தற்கொலை!

 

மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் காவலர் தற்கொலை!

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த வேளாங்குளம் பகுதியை சேர்ந்தவர் காவலர் அசோக்குமார் (27). இவரது மனைவி சித்ராதேவி. காவலர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. தம்பதியினர் இருவரும் ராமநாதபுரம் ஆயுதப்படை வளாக குடியிருப்பில் தங்கி, கீழக்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தனர்.

மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் காவலர் தற்கொலை!

இந்த நிலையில், கடந்த மாதம் குடும்ப தகராறில், சித்ராதேவி கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்டு வந்த அசோக்குமார், நேற்று முன்தினம் இரவு சித்ராதேவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால், விரக்தியடைந்த அசோக்குமார் நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கேணிக்கரை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.