மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, 2 மகள்கள் பலி!

 

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, 2 மகள்கள் பலி!

அரியலூர்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, 2 மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அரியலூர் மாவட்டம் வெற்றியூர் கிராமத்தை சேரந்தவர் ராமமூர்த்தி (60). இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும் நிலையில், சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டை பார்ப்பதற்காக ராமமூர்த்தி, தனது மனைவி, 2 மகள்கள் உள்ளிட்டோருடன் காரில் அரியலூருக்கு வந்து கொண்டிருந்தார். கீழப்பழுவூர் அருகேயுள்ள சாத்தமங்கலம் பகுதியில் சென்றபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது.

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, 2 மகள்கள் பலி!

இதில், ராமமூர்த்தி, அவரது மூத்த மகள் நாகவள்ளி (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இளைய மகள் நாகலட்சுமி (35), 3 குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே நாகலட்சுமி உயிரிழந்தார். இதனையடுத்து, குழந்தைகள் உள்பட 5 பேரும் முதலுதவி சிகிச்சைக்கு பின், தஞ்சை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.