மதுரையில் கண்மாயில் மூழ்கி இளைஞர் பலி!

 
drowning

மதுரை பழங்காநத்தத்தில் கண்மாயில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் கண்ணன்(28). கூலி தொழிலாளி. இவர் நேற்று நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றிருந்தார். நீச்சல் அடித்து விளையாடிக் கொண்டிருந்த கண்ணன், எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

madurai gh

அதன் பேரில், கிராம இளைஞர்கள் கண்மாயில் இறங்கி தேடினர். ஆனால், கண்ணனை மீட்க முடியவில்லை. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் மற்றும் மதுரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், மதுரை பொறுப்பு நிலைய அலுவலர் தயாளக்குமார் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்மாயில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேர தேடலுக்கு பின்னர் அவர்கள் கண்ணனை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். தொடர்ந்து, எஸ்.எஸ்.காலனி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.