நெல்லை அருகே இளம்பெண் அடித்துக்கொலை - கணவர் வெறிச்செயல்!

 
murder

நெல்லை அருகே குடும்ப தகராறில் மனைவியை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்ற லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் பழவூர் தெப்பக்குள தெருவில் வசித்து வருபவர் சுடலையாண்டி. லாரி ஓட்டுநர். இவரது மனைவி ஜெயலட்சுமி(36). இவர்களுக்கு 3 பிள்ளகைள் உள்ளனர். இதனிடையே, ஜெயலட்சுமிக்கு, வேறு ஒரு நபருடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்து சுடலையாண்டி கண்டித்ததால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

nellai

இந்த நிலையில், நேற்று இந்த விவகாரம் தொடர்பாக ஜெயலட்சுமிக்கும், சுடலையாண்டிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுடலையாண்டி,  கிரிக்கெட் மட்டையால் ஜெயலட்சுமியை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த பழவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஜெயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக புகாரின் பேரில் பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுடலையாண்டியை கைது செய்தனர். குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.