தகராறில் ஈடுபட்டதை தட்டிகேட்ட உறவினர் கொலை – போதை ஆசாமி கைது

 

தகராறில் ஈடுபட்டதை தட்டிகேட்ட உறவினர் கொலை – போதை ஆசாமி கைது

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதை தட்டுக்கேட்ட உறவினரை, இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற நபரை போலீசார் கைதுசெய்தனர். சாத்தூர் அருகே நத்தத்துபட்டியில் வசித்து வருபவர் மாரிமுத்து (30). இவருக்கு, 2 முறை திருமணம் நடைபெற்ற நிலையில், மனைவிகள் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால், மனநலம் பாதிக்கப்பட்ட அவர், மது அருந்திவிட்டு குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு மாரிமுத்து வழக்கம் போல் மது அருந்திவிட்டு தனது தாயாரிடம்

தகராறில் ஈடுபட்டதை தட்டிகேட்ட உறவினர் கொலை – போதை ஆசாமி கைது


தகராறு செய்துள்ளார். இதனை, பக்கத்து வீட்டில் வசித்து வரும்
உறவினர் சமுத்திரபாண்டி (54) தட்டிகேட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, தனது கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் சமுத்திரபாண்டியை கடுமையாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் சமுத்திரபாண்டி உடலை

தகராறில் ஈடுபட்டதை தட்டிகேட்ட உறவினர் கொலை – போதை ஆசாமி கைது

கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த இருக்கண்குடி போலிசார், பின்னர், அந்த பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த மாரிமுத்துவை கைதுசெய்து விசாரித்தனர். அப்போது, சமுத்திரபாண்டி தன்னை
அடிக்கடி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கேலி செய்து வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.