இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், செஸ் மாஸ்டர் பலி

 

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், செஸ் மாஸ்டர் பலி

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் செஸ் மாஸ்டர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி கஸ்பா பகுதியை சேர்ந்தவர் சாலமன். செஸ்மாஸ்டர் ஆன இவர், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பயிற்சி அளித்து வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் ஆறுமுகநேரியில் உள்ள மாணவரின் வீட்டிற்கு சென்று பயிற்சி அளித்துவிட்டு, அவர் இருசக்கர வானத்தில் வீட்டிற்கு திரும்பிகொண்டிருந்தார்.

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், செஸ் மாஸ்டர் பலி

திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராணி மகாராஜபுரம் அருகே சென்றபோது சாமலன் வாகனம் மீது, எதிரே கார் ஒன்று அதிவேகமாக மோதியது. இதில் சாலையில் தூக்கிவீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். விபத்தை கண்டு அருகில் இருந்தவர்கள் சாலமனை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி பெற்ற அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சாலமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.