கயத்தாறு அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி!

 

கயத்தாறு அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி!

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த அய்யனார்ஊத்து கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் செந்தூர்ராஜா (14). இவர் அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊடரங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்த செந்தூர்ராஜா, நேற்று நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்கு குளிக்க சென்றார்.

கயத்தாறு அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி!

அப்போது, கிணற்றின் மேலே இருந்து தண்ணீரில் குதித்த செந்தூர்ராஜா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், அந்த பகுதி மக்களுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் இளைஞர்கள் கிணற்றில் இறங்கி தேடியபோதும், சிறுவனை மீட்க முடியவில்லை.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயத்தாறு போலீசார், முத்துக்குளியல் தொழிலாளிகளை கொண்டு கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர தேடலுக்கு பின் அவர்கள், சிறுவனை சடலமாக மீட்டனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.