கடன் தொல்லையால் தாய் – மகன் விஷம் குடித்து தற்கொலை

 

கடன் தொல்லையால் தாய் – மகன் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி

திருச்சியில் கடன் தொல்லை காரணமாக தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் நச்சலூரை சேர்ந்தவர் செல்லம்மா (65). இவரது மகன் ராஜா என்கிற ரமேஷ்பாபு (40). ரமேஷ்பாபுவிற்கு திருமணமாகி, மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஸ்ரீரங்கம் பெரியார் நகர் அடுத்த கணபதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

கடன் தொல்லையால் தாய் – மகன் விஷம் குடித்து தற்கொலை

இதனிடையே ராஜாவின் மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூறுக்கு சென்ற நிலையில், கடந்த 2 நாட்களாக அவரது வீடு உள்புறம் சாத்தப்பட்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் ஜன்னல் வழியே பார்த்தபோது ராஜா மற்றும் அவரது தாயார் செல்லம்மா ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர்.
இதனையடுத்து வீட்டு உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் ஶ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில், செல்லம்மா மற்றும் அவரது மகன் ராஜா ஆகியோர் வாழை விவசாயம் செய்து வந்ததாகவும், இதற்காக அதிகளவில் கடன் வாங்கிய நிலையில், அதனை திருப்பி செலுத்த முடியாததால் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்துள்ளது.