வேலை கிடைக்காத விரக்தியில் கேட்டரிங் தொழிலாளி தற்கொலை
திருச்சி
திருச்சியில் வேலை கிடைக்காத விரக்தியில் கேட்டரிங் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மேலசிந்தாமணி காவேரி நகரை சேர்ந்தவர் சிவா(36). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இதனிடையே வெளிநாட்டில் கேட்டரிங் வேலை செய்துவந்த சிவா, சில மாதங்களுக்கு முன்பு திருச்சிக்கு திரும்பி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் திருச்சியில் சரியாக வேலை கிடைக்காததால் அவர் செலவிற்கு பணமின்றி தவித்து வந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் கோட்டை காவல்நிலைய போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து சிவாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.