நாட்றம்பள்ளி அருகே டிராக்டர் ஓட்டுநர் கழுத்து நெரித்துக் கொலை!

 
natrampalli murder

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் டிராக்டர் ஓட்டுநர் கழுத்துக்நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா வெலக்கல் நத்தம் அடுத்த பையனப்பள்ளி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சாமிபிள்ளை மகன் அன்பழகன் (45). டிராக்டர் ஓட்டுநர். இவரது மனைவி சரிதா (40). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன்கள் இருவரும் சிங்கப்பூரில் பணிபுரியும் நிலையில், கடைசி மகன் ஜேசிபி ஓட்டுனரான இளவரசு(21) உடன் தம்பதியினர் வசித்து வந்தனர். 

tirupattur gh

இந்த நிலையில், அன்பழகனுக்கு, வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக கூறி சந்தேகமடைந்த சரிதா, அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனைவியுடன் கோபித்துக் கொண்டு அன்பழகன், கடந்த 6 மாதங்களாக எம்.ஜி.ஆர் நகர் அருகே கொல்லை பகுதியில் உள்ள தனது விவசாய தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை வீட்டின் வெளியே அன்பழகன் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.  இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.  

அதன் பேரில், போலீசார் அன்பழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் மனைவி சரிதா, மகன் இளவரசு ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.