ஆந்திராவுக்கு மினி ஆட்டோவில் கடத்தமுயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

 

ஆந்திராவுக்கு மினி ஆட்டோவில் கடத்தமுயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே ஆந்திராவுக்கு மினி ஆட்டோவில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் ஊராட்சி மாராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் காவலர் குருபிரசாத். இவர் பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பியபோது அந்த வழியாக அதிவேகமாக சென்ற மினி ஆட்டோவை தடுத்து நிறுத்தினார். அப்போது வாகனத்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் மர்மநபர்கள் தப்பியோடி உள்ளனர்.

ஆந்திராவுக்கு மினி ஆட்டோவில் கடத்தமுயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

இதுகுறித்து குருபிரசாத், ஆம்பூர் கிராமிய போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மினிஆட்டோவை சோதனை செய்ததில், ஆட்டோவில் சுமார் 3 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, மினி ஆட்டோவை காவல் நிலையம் எடுத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில், மினிஆட்டோ வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் குறித்து வழக்குப்பவு செய்த போலீசார், தப்பியோடிய ஓட்டுநர் மற்றும் மர்மநபர்களை தேடி வருகின்றனர்/