திருவண்ணாமலை கோயில் உண்டியல் காணிக்கை ஆக ரூ.1.34 கோடி வசூல்!

 

திருவண்ணாமலை கோயில் உண்டியல் காணிக்கை ஆக ரூ.1.34 கோடி வசூல்!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலய பிப்ரவரி மாத உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் ரொக்கம், 317 கிராம் தங்கம் ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை கோயில் உண்டியல் காணிக்கை ஆக ரூ.1.34 கோடி வசூல்!

அதன்படி, ஜனவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று, கோயில் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் நடந்தது. கோயில் வளாகத்தில் நடந்த இந்த பணியில், 100-க்கும் மேற்பட்ட கோயில் பணியாளர்கள், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

அப்போது, ஜனவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை ஆக ஒரு கோடியே 34 லட்சத்து 27 அயிரத்து 677 பணம் வசூலானது. மேலும், 317 கிராம் தங்கம், 560 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளது.