தஞ்சை பெரியகோவிலில் ஊரடங்கிற்கு பின் பக்தர்கள் கலந்து கொண்ட முதல் பிரதோஷம்
Sep 16, 2020, 13:01 IST1600241508000
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் ஆலயம் என்ற பெரியக்கோவிலில் மகாநந்தியெம் பெருமானுக்கு பிரதோச வழிபாடு நடைபெற்றது.
குறைந்த அளவு எண்ணிக்கையிலான பக்தர்களே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
முகக் கவசம், சமூக இடைவெளி, மருத்துவ பரிசோதனைக்கு பிறகே உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மகாநந்தியெம்பெருமானுக்கு பால் , தயிர், மஞ்சள், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் பக்தர்கள் கலந்து கொண்ட முதல் பிரதோஷம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை பெரியகோவிலில் ஊரடங்கிற்கு பின் பக்தர்கள் கலந்து கொண்ட முதல் பிரதோஷம் #Thanjavur #TTN pic.twitter.com/Vcxqb1kJ0m
— Top Tamil News (@toptamilnews) September 16, 2020