அருந்ததிராய் எழுதிய புத்தகம் நீக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Nov 17, 2020, 22:58 IST1605634102000
தஞ்சாவூர்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் நீக்கப்பட்டதை கண்டித்து, தஞ்சையில் அனைத்துக் கட்சி மற்றும்இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அயனாவரம் முருகேசன் தலைமையில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
அப்போது, அருந்ததி ராய் எழுதிய புத்தகம், பாடப்பிரில் இருந்து நீக்கப்பட்டதற்கு கண்டம் தெரிவித்த போராட்டக்காரர்கள், தனியார் தொலைக்காட்சி நிருபர், ஏரி ஆக்கிரமிப்பாளர்களால் வெட்டிகொல்லப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை கைதுசெய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.