சுரண்டையில் துணிக்கடையில் திடீர் தீ விபத்து- பல கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சேதம்!

 

சுரண்டையில் துணிக்கடையில் திடீர் தீ விபத்து- பல கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சேதம்!

தென்காசி

தென்காசி மாவட்டம் சுரண்டையில் பிரபல துணிக்கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமடைந்தன.

தென்காசி மாவட்டம் சுரண்டை – சங்கரன்கோவில் சாலையில் பிரபல துணிக்கடை செயல்பட்டு வருகிறது. 4 தளங்கள் கொண்ட இந்த கடையின் முதல் தளத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி உடனடியாக சங்கரன்கோயில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சுரண்டையில் துணிக்கடையில் திடீர் தீ விபத்து- பல கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சேதம்!

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து, அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, தீ மளமளவென மற்ற 3 தளங்களுக்கும் பரவியதால், கட்டிடமே தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து, சங்கரன்கோவில், தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப் பட்டு, தீயை அணைக்கும் பணி நடைபெற்றுது.

7 மணிநேரத்திற்கும் மேலான போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதில் கடையில் இருந்த சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து சுரண்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.