திருமணமான ஓரு ஆண்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - உதவி ஆட்சியர் விசாரணை

 
suicide

மயிலாடுதுறை அருகே திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உதவி ஆட்சியர் விசாரித்து வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டம்  பொறையாறு அடுத்துள்ள கிடங்கல் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் ரேணுகாதேவி (21). இவருக்கும், கீழமையூர் உடையார் இருப்பை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ரேணுகா தேவி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டிற்கு தூங்க செல்வதாக  கூறிச் சென்ற ரேணுகாதேவி, நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

police

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்தனர். அப்போது, ரேணுகா தேவி தூக்கிட்ட தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து ரேணுகாதேவியின் தந்தை சரவணன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான ஓரு ஆண்டில் ரேணுகாதேவி தற்கொலை செய்துகொண்டதால் இதுகுறித்து சீர்காழி உதவி ஆட்சியர் நாராயணன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.