சேலம்- ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி
Oct 12, 2020, 13:18 IST1602488914000
சேலம்
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ஜெகன்நாதன்(40). இவர்
சேலத்தை சேர்ந்த குமார் மற்றும் சேகர் ஆகியோரிடம் இருந்து ஆட்டோ வாங்குவதற்காக 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேலும் ஒரு லட்ச ரூபாய் கொடுத்ததால் தான் ஆட்டோவை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் வேதனையடைந்த ஜெகன்நாதன் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.