பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்... ரேஷன் கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

 
cbe

கோவையில் ரேஷன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா? என மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 10.78 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை பூமார்க்கெட் பகுதியில்  உள்ள தெப்பக்குளம் வீதியில், ராமலிங்க சவுடேஸ்வரி கூட்டுறவு பண்டக சாலையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

cbe

ஆய்வின்போது, அரசு அறிவித்த 21 பொருட்களும் பொதுமக்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? என்பதையும், பொருட்களின் தரம் குறித்தும் அவர் ஆய்வுசெய்தார். தொடர்ந்து, அங்கு பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்களிடம், பொருட்களின் தரம் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். தொடர்ந்து, ஊழியர்களிடம் தரமான பொருட்கள் வழங்குவதோடு, அனைத்து பொருட்களும் பொதுமக்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் சமீரன் அறிவுறுத்தினார்.