மலர் சாகுபடி செய்து அசத்தும், மகளிர் சுயஉதவி குழுவினர்
Oct 23, 2020, 11:02 IST1603431157000
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுயஉதவி குழுவை சேர்ந்த பெண்கள் பசுமைக்குடில் அமைத்து மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் கார்னேஷன், இன்கா மேரி கோல்டு, ஆப்ரிகன் மேரிகோல்டு, ஃப்ரென்ச் மேரி
கோல்டு, சாமந்தி, செண்டு பூக்கள் போன்ற பல்வேறு பூக்களை சாகுபடி செய்துவருகின்றனர். இந்நிலையில், ஆயுதபூஜையை முன்னிட்டு, பூக்களின்
விலை அதிகரித்துள்ளதால் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக செண்டு பூக்கள் கிலோ 60 பாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 100 ருபாய்க்கு விற்பனையாகிறது.