பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கணக்கில்வராத ரூ.55,920 பறிமுதல்
Oct 30, 2020, 16:22 IST1604055161000
நாமக்கல்
பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத 56 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது கணக்கில் வராத 54 ஆயிரத்து 920 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, நகராட்சி ஆணையர் இளவரசன், பொறியாளர் சரவணன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.