தூத்துக்குடி அருகே மூதாட்டி மர்ம மரணம் - போலீசார் விசாரணை!

 
dead body

தூத்துக்குடி அருகே 70 வயது மூதாட்டி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து மகன் மற்றும் மருமகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள கயத்தார் பகுதியை சேர்ந்தவர் காந்தையா. இவரது மனைவி காந்தம்மாள்(70). இவர்களுக்கு முருகன், சுப்புத்தாய், முத்துலெட்சுமி ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். கணவர் உயிரிழந்த நிலையில், வழக்கறிஞரான மகன் முருகன், மருமகள் ஜோதிமணி ஆகியோருடன் காந்தம்மாள் வசித்து வந்தார். இதனிடையே, தந்தை பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதித்தரும் படி முருகன், காந்தம்மாளிடம் கேட்டு வந்தார். 

police

இதற்கு காந்தம்மாள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முகனின் மனைவி ஜோதிமணி, காந்தம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மாமியார், மருமகள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர், கட்டிலில் படுதது தூங்கிய காந்தம்மாள் நேற்று காலை நீண்ட நேரமாகியும் எழுந்திருக்க வில்லை. இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் சென்று பார்த்தபோது காந்தம்மாள் உயிரிழந்தது தெரிய வந்தது. தகவலின் பேரில் கயத்தார் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இரவில் ஏற்பட்ட தகராறில் அவர் அடித்துக்கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் காந்தம்மாளின் மகள் சுப்புத்தாய் கயத்தார் காவல நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, முருகன் மற்றும் ஜோதிமணி ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே காந்தம்மாள் இயற்கையாக உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.