10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோவில் கைது
திருப்பரங்குன்றத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேலபச்சேரியை பகுதியை சேர்ந்த குமார் – தமிழரசி தம்பதியினரின் 10 வயது மகள், நேற்று மாலை வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது,கடையின் அருகில் நின்று கொண்டிருந்த ஓம்சக்தி நகரை சேர்ந்த முத்துராஜ்(29) என்பவர், சிறுமியிடம் பேச்சு கொடுப்பது போன்று மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
சிறுமி உடனடியாக கூச்சல் எழுப்பி அவனிடம் இருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில், சிறுமியின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் முத்துராஜை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், முத்துராஜ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.