ஆண்டவர் உத்தரவு : சிவன்மலையில் வேல் வைத்து சிறப்பு வழிபாடு!

 
sivanmalai

திருப்பூர் மாவட்டம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலி வேல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிறப்பு அம்சமாக ஆண்டவன் உத்தரவு என்ற முறை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, முருக கடவுள் பக்தரின் கனவில் தோன்றி தெரிவிப்பதாக கூறும் பொருளை வைத்து சிறப்பு பூஜை செய்து, மூலவர் அறைக்கு முன்பாக தூணில் உள்ள உத்தரவுப்பெட்டி எனப்படும் கண்ணாடி பெட்டியில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும். 

sivanmalai

முன்னதாக கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் நெற்கதிர் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில், சேலத்தை சேர்ந்த பக்தரின் கனவில் வந்ததாக கூறி, நேற்று வேல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கண்ணாடி பெட்டிக்குள்ளிருந்த நெற்கதிர் அகற்றப்பட்டு, வேல் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.