தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை!

 
murder

தூத்துக்குடியில் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி சோரீஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைக்கண்ணன் மகன் முத்துகுமார்(43). இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். மேலும், ஆட்சியர் அலுவலகம் அருகே நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று மதியம் முத்துகுமார் நிதி நிறுவனத்தில் இருந்தபோது, அங்கு வந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மநபர்கள், அவரை சரமாரியாக வெட்டினர். இதில் முத்துகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி சிப்காட் போலீசார்,   கொலையான முத்துகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

tuticorin

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த 2019ஆம் ஆண்டுகளுக்கு முன் கொலை வழக்கில் கைதான முத்துகுமாரின் தம்பி சிவகுமார், நீதிமன்றம் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக இருதரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், தற்போது முத்துக்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.