கிருஷ்ணகிரி: விளை நிலத்தில் கஞ்சா பயிரிட்ட இருவர் கைது

 

கிருஷ்ணகிரி: விளை நிலத்தில் கஞ்சா பயிரிட்ட இருவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விளை நிலத்தில் கஞ்சா பயிரிட்ட 2 பேரை கைதுசெய்த போலீசார், சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா செடிகளை தீவைத்து அழித்தனர். ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே அட்டப்பள்ளம் என்னும் கிராமத்தில் விவசாய நிலங்களில் கஞ்சா பயிரிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கிருஷ்ணகிரி: விளை நிலத்தில் கஞ்சா பயிரிட்ட இருவர் கைது

இதனையடுத்து அந்த பகுதியில் அதிரடி சோதனையில் இறங்கிய அஞ்சட்டி போலீசார், அங்கமுத்து மற்றும் கோவிந்தன் ஆகியோரது நிலங்களில் சட்டவிரோதமாக கஞ்சா பயிர் வளர்த்து வந்தது தெரியவந்தது.

கிருஷ்ணகிரி: விளை நிலத்தில் கஞ்சா பயிரிட்ட இருவர் கைது

இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைதுசெய்த போலீசார், அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா செடிகளை தீயிட்டு அழித்தனர்.