குமரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவர் கைது
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த தனியார் கல்லூரி மாணவர்கள் இருவரை போலீசார் கைதுசெய்தனர்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்திவந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், மூலச்சல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தக்கலை காவல்துறையினர், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை மறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மூலச்சல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அஜிமோன் மற்றும் ரூஸ்வான் என தெரியவந்தது. மேலும், அவர்கள் இருவரும், வெளிமாவட்டத்தில் இருந்து கஞ்சாவை கடத்திவந்து சக மாணவர்களிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.