குளத்தில் மூழ்கி இலங்கை தமிழர் பலி!

 

குளத்தில் மூழ்கி இலங்கை தமிழர்  பலி!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி இலங்கை அகதி பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி அடுத்த கொட்டாரம் பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் மாணிக்கம் (63). இவர் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு ஞானசுந்தரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

குளத்தில் மூழ்கி இலங்கை தமிழர்  பலி!

சம்பவத்தன்று மாலை பெருமாள்புரத்தில் உள்ள பிள்ளையார் குளத்திற்கு மாணிக்கம் குளிக்க சென்றார். ஆனால் இரவாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மாணிக்கம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அங்குள்ள பிள்ளையார் குளத்தில், மாணிக்கத்தின் உடல் சடலமாக மிதந்தது. தகவலின் பேரில் கன்னியாகுமரி போலீசார், சடலத்தை மீட்டு அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.