மகன் இறந்த வேதனையில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை!

 
poison

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மகன் மற்றும் பேரன் உடல்நல குறைவால் உயிரிழந்ததால் வேதனையில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள எத்தர்லபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தாயி (71). இவர் தனது மகன் மற்றும் பேரனுடன் ஒன்றாக வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு திடீர் உடல்நல குறைவு காரணமாக மகனும், பேரனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் மூதாட்டி ஆனந்தாயி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்வில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

dharmapuri

வீட்டில் மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மூதாட்டி ஆனந்தாயி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.