மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மீனவர் கல்லால் தாக்கி படுகொலை!

 
murder

தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மீனவர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் மீனவர் அலெக்ஸ்(32). இவருக்கு திருமணமாகி இளவரசி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு அலெக்ஸ் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். அப்போது, மதுபோதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள், அலெக்சின் தலையில் கல்லால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடந்த அலெக்ஸ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

tuticorin

இதனை அடுத்து, அவரது உடலை காட்டுப்பகுதியில் வீசிவிட்டு அவர்கள் தப்பிச்சென்றனர். காலையில் அலெக்ஸ் சடலமாக கிடப்பதை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனரை.