மதம் மாற்ற முயற்சிப்போர் மீது நடவடிக்கை கோரி இளைஞர் மனு!
Oct 23, 2020, 19:35 IST1603461917000
ஈரோடு
தம்மை மத மாற்றம் செய்ய முயற்சிக்கும் தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில், இளைஞர் ஒருவர் புகார்
அளித்தார். ஈரோடு மாவட்டம் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவானந்தம் என்ற அந்த இளைஞர் தனது மனுவில், 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயிடம்
அறிமுகமான கவுந்தப்பாடியை சேர்ந்த ஒருவர், அவரை மூளைச்சலவை செய்து கிறிஸ்தவராக மாற்றிவிட்டதாகவும்.
தற்போது தன்னையும் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்த நிலையில், மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் அந்த நபரின் மனைவி நடவடிக்கை எடுக்க விடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தம்பதியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.