காதல் திருமணம் செய்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
ஈரோட்டில், காதலித்து திருமணம் செய்து கொண்ட மீன் வியாபாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(26), மீன் வியாபாரியான அவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.
பிரபாகரனுக்கு மதுப்பழக்கம் உள்ளதால், அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், மல்லிகா அவரது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த பிரபாகரன், மனவேதனையில் மனைவியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரபாகரனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் . அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பிரபாகரன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.