குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை!

 

குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை!

ஈரோடு

ஈரோட்டில் மகள் பேச மறுத்ததால் வேதனையில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாலாஜி. இவரது மனைவி அன்புகனி. இவர்களுக்கு ஒரு மகள் உட்பட 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அன்புகனிக்கும், அவரது மகளுக்கும் இடையே மன வருத்தம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை!

இதனால், தாய் – மகள் இருவரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர். மகளுடனான பிரச்சினை காரமணாக மனமுடைந்த அன்புகனி, கடந்த வாரம் வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அன்புகனி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.