போக்குவரத்துக்கு இடையூறான வாகனங்களுக்கு அபராதம்: ஈரோட்டில் அதிரடி!
Sep 16, 2020, 18:33 IST1600261436000
ஈரோடு முத்துரங்கன் வீதி, பிரகாசம் வீதி போன்ற பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகளும் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளதாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து இன்று போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் முத்துரங்கன் வீதி, பிரகாசம் வீதி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். இதைப் போன்று அந்த பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் தட்டிகள் மரக்கட்டைகள் போன்றவற்றையும் போக்குவரத்து போலீசார் அகற்றினர்.